Wednesday, May 4, 2011

சொறி? வெறி? வெரி சொறி..!!!"

நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்சம் எழுத வந்திருப்பதில் சந்தோசம்.... என்ன செய்தாலும் எழுதுவதை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவதில்லை..... பரபரப்பாய் 2011 சென்றுகொண்டிருக்கிறது... எவண்டி உன்ன பெத்தானில் தொடங்கி ஐக்கியநாடுகள் அமைப்பின் நிபுணர் குழு அறிக்கை, கனடா ராதிகா, பாபாவின் ஒசாமாவின் மரணங்கள் வரை உலக விடுப்புகள் அநேகம்..... சுவாரசியமாய் தான் நாட்கள் நகர்கின்றன.... 

அடுத்தவரின் தவறுகளில் அநேகம் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்வது மிகச்சரி தான்... தெய்வம் நின்று கொல்வான் என்பது அதைவிட மிகசரியாய் இந்தக்காலகட்டதுக்கு பொருந்துகிறது. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள் !!!! :P




நல்லவனாக ஒருவன் வாழ்வதனால், மக்களுக்கு அனேக சேவைகள் செய்வதனால், நல் கருத்துக்களை போதிப்பதனால் மாத்திரம் ஒருவரை கடவுளாக கருதிக்கொள்கிற பெருந்தன்மை..... பாமரத்தனத்தின் உச்சம் அன்றி வேறென்ன.... கடவுள் பற்றிய எந்த விவாதமும் சமரசமாய் முடிவுக்கு வருவதில்லை... காரணம் அவரவர் தத்தம் புரிதலோடு கடவுள் சார்ந்த கருத்துக்களை அணுகுவது தான். எதுவுமே சரி பிழை என்று கிடையாது...  அவரவர் நம்பிக்கைகேற்ப்ப அவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் சரியாக இருக்கலாம்.  மற்றவரிடத்தில் அன்போடும் கண்ணியத்தோடும் நேர்மையாய் வாழச்சொல்லித்தருகிற எந்த மார்க்கத்தையும் பின்பற்றலாம்... ஆனால் அதைக்கற்றுத்தருகிற எல்லாரும் கடவுளாகி விடமுடியாது... கடவுள் என்ற ஒரு சக்தி நிச்சயமாய் இருக்கிறது... அதற்காக எல்லாரையும் கடவுளாக்கிப்பார்க்கிற மூடத்தனம் கட்டாயம் கைவிடப்பட வேண்டும். 


ஒசாமா நிச்சயமாய் இறந்திருப்பாரா ?? அல்லது இல்லாத் ஒருவரை மறுபடி கொன்று சரிந்து போயிருக்கிற தம் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப ஓபாமா செய்கிற சூழ்ச்சியா???? சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் உண்மை தெரியும்... எது எப்படி இருந்தாலும் ஒசாமாவை கொன்றதுக்காக மக்கள் அமெரிக்காவை தலையில் தூக்கி வைத்து ஆடப்போவதில்லை.... ஒன்று சொறிநாய் மற்றது வெறிநாய்... இரண்டுமே மக்களுக்கு ஆபத்தானவை தான்.... "சொறி"யின் கதை முடிந்தது... ஆனால் "வெறி"யின் வெறி அடங்கப்போவதேயில்லை.......  வெரி சொறி மக்கள்ஸ் ... உங்கள் கதை அவ்வளவு தான்...!!!!


மீண்டும் சந்திக்கும்வரை 
என்றென்றும் உங்கள் 
ஜே !!!

Friday, December 10, 2010

well... சும்மா ஒரு பதிவு

ஆர்வக்கோளாரில் பதிவெழுத வந்து 
எழுதி எழுதி பழகலாம் என்று அரைகுறையாய் எழுதி
பிறகு அவ்வப்போது எழுதி.... இப்போது அதுவும் இல்லாமல் 
என்ன கொடும சார் இது...
இதுல மாசத்துக்கு இரண்டு பதிவு என்று சவால் வேற....
ம்ம்ம்ம்..... 
"நான் நானாக இல்லை தாயே..." என்ன பண்றது சார் என் வேலை அப்படி...
வெட்டியா இருக்கிறது எண்டா லேசுபட்ட வேல எண்டு நினைசீங்களா...
well... உண்மையிலேயே கொஞ்சம் வேலை தான்... இருந்தாலும் பதிவுகள வாசிக்கிறத நிப்பாட்டேல.... கடந்த வாரங்களில் நிறைய சுவாரசியமான அனுபவங்கள்... நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்....


அண்மையில் the social network பார்த்ததிலிருந்து Mr. Mark உம் விக்கி லீக்ஸ் தலை Julian Assange உம் நிறையவே என்னை கவர்ந்திருந்தார்கள்.  அவர்களை பற்றி இன்னும் கொஞ்சம் படித்துக்கொண்டு ஒரு பதிவெழுதலாம் என்றிருக்கிறேன். அண்மையில் நடந்த பதிவர் சந்திப்பை நிறையவே மிஸ் பண்ணுவதாய் ஒரு பீலிங்.... கட்டாயம் வந்திருக்க வேணும். well thats it for tonight..!!!


  
வெகுசீக்கிரம் ஒரு முழுமையான பதிவில் சந்திக்கலாம் (என்ற  நம்பிக்கையுடன்) 
உங்கள் 
ஜெகா.

(எல்லா மாதிரியும் எழுதிப்பார்த்து பழக நினைத்த படியால் ஒரே அலங்கோலமாய் எழுதி இருக்கிறன்  what to do... சீக்கிரம் என் பாணியை கண்டுபிடிப்பேன்)

Tuesday, October 12, 2010

"அவன் நேசிக்கும்...."

இலக்கண இலக்கியங்கள் பரிட்சயமில்லா ஒரு பாமரனின் பரிதவிப்பு.... அவன் நேசிக்கும் அழகு தமிழில்.....


****










காற்றோடு கதை பேசும் உன் விழிகளுள் தொலைந்து போனேனடி ஒரு நாள்...
தேடிப்பார்க்க வழியேதும் இல்லாமல் என் நெஞ்சம் ஏங்கித்தவிக்க..
நம் விழிகள் தமக்குள் பார்த்து காதல் வளர்த்து காத்திருக்க....
நீ போகும் வழியெங்கும் என் கால்கள் நடை பயில...
என் நாடித்துடிப்பு உன் இதழோரப் புன்னகைக்காய் தவம் கிடக்க... 
காலம் கனியும் மட்டும் காற்றோடு நானும் பேசிக்கொண்டிருப்பேன்..... 
காதல் கொண்ட நம் கண்களின் கதையை... 


- Jey


****








உறக்கமில்லா என் இரவுகளில் உன் நினைவுகள் சுகமாய் விரிய... 
யாரும் இல்லா வான் வெளி வழியே உன் முகம் பார்த்து படுத்தபடி.. 
கண்சிமிட்டும் அந்த நட்சத்திரங்கள் நீயென்றெண்ணி பேசிச்சிரித்திருக்க... 
காத்திருப்பு மட்டுமே எனக்கான வழியாய் காலம் சொன்னது நினைவுக்கு வர... 
வலித்ததடி என்னிலை எண்ணி எனையே வெறுத்தேனடி...

என் வார்த்தைகள் மௌனமாய் உனைச்சேரும் நிலை கண்டு... 

ஏங்கித்தவித்து, வெம்பி அழுது, சினம் கொண்டு, மீண்டு எழுந்து...
தென்றலென்றிருந்த நீ என் நெஞ்சுள் புயலாய் புகுந்த விதம் எண்ணி.... 
உன் பார்வை தரும் பரவசத்தில் மூழ்கி பாடல் வடித்து... 
என் கனவுகள் என்றோ நிஜம் ஆகும் என்ற கனவில்...
சுகமான உன் நினைவுகளோடு காத்திருக்கிறேன் என் காதலி...


- Jey



****




அனிச்சையாய் என்னுள்ளே வந்தவள் நீ...
என் நெஞ்சில் ஆழப்பதிந்தவள் நீ...
அழகாய் என் உயிராய் என் வாழ்வாய்...
என் எல்லாமாய் போனவளும் நீ...
நானே அறியாமல் எனக்கானவளாய் மாறியதும்,
அது புரியாமல் நீயும் சொல்லத்தெரியாமல் நானும்,
தவிக்க எனை நீ தவிர்த்திருக்க,
அது என்னைப்போட்டு வதைக்க,

மற்றொரு தனிமையான இரவிலே,
முழுநிலவொளி ஜன்னல் வழி,
என் வலியெல்லாம் மறைத்து,
உன் நினைவுகளை மீட்டுக்கொடுக்க,
புன்னைகையோடு விழி மூடுகிறேன்.....
யாரும் இல்லா வீதியோரமாய்,
என் கைபிடித்து நடைபோடும் உன்னை,
கனவிலே காணும் அங்கலாய்ப்பில்....


- Jey



****

Monday, August 30, 2010

GOD !!!

"We are in the position of a little child entering a huge library filled with books in many languages. The child knows someone must have written those books. It does not know how. It does not understand the languages in which they are written. The child dimly suspects a mysterious order in the arrangement of the books but doesn't know what it is. That, it seems to me, is the attitude of even the most intelligent human being toward God. We see the universe marvelously arranged and obeying certain laws but only dimly understand these laws." - -Albert Einstein

Saturday, August 14, 2010

அவர்களுக்கென்ன தெரியும்...!!!


இந்தவாரம் இரண்டாம் தடவையாக இதே மாதத்தில் யாழ் செல்ல வாய்ப்புக்கிடைத்தது..  யாழ் என்றால் யாழ் நகரம் அல்ல யாழ் செல்லும் வீதியில் ஒரு கிராமம். செல்லும் வழியெங்கும் சகோதர இனத்தவர்கள் உற்சாகமாக தங்கள் விடுமுறையை களித்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த புத்த கோவில்களில் வழிபடுகிறார்கள். இராணுவ நினைவுத்தூபிகளின் முன்னால் நின்று தங்கள் அஞ்சலிகளை செலுத்துகிறார்கள், இராணுவ படைப்பிரிவுகள் நடத்தும் உணவகங்களில் பாணும் பருப்பும் சாப்பிடுகிறார்கள் சிலர் கிரிபத் சாப்பிடுகிறார்கள். வேறு சிலர்  வெளிகளில் தாமாகவே சமைத்து உண்ணுகிறார்கள். இப்படியாக முன்னெப்போதும் இல்லாத புதிய காட்சிகள்...

குளிர்ச்சியான கிராமத்து வீதிகளில் நடந்து திரிவது ஒரு சுகம் தான். கப்பலேந்தி மாதா கோவில் உற்சவதிலும் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவம். சமயங்கள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அங்கு நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் இரசிக்க முடிந்தது. அதிலும் குறிப்பாக நிறைந்து நின்ற இராணுவத்தினர் சிரித்தபடி மக்களை வரவேற்று உபசரித்தமை, எப்போதும் தமிழில் மாத்திரம் உரையாடியமை (அதிலும் அவர்களில் அநேகம் பேர் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருந்தார்கள்),  அவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான பயிற்சிகளை காட்டியது.



விழுந்து விழுந்து அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் சரளமாக பேசினார்கள், கையசைத்து விடைகொடுத்தார்கள், எல்லாமே மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள் தான் என்றாலும் எதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்துவது மாத்திரம் புரிந்தது. மக்களோடு அவர்கள் பழக ஆர்வமாயிருப்பது நல்ல விஷயமே என்றாலும் அவர்கள் அணிந்திருக்கும் சீருடை காரணமாக மக்களால் அவர்களோடு இயல்பாக பழக முடியவில்லை என்பது தான் நிஜம். மக்களோடு மக்களாக வாழ அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கபடுகின்றன.  அதிகமாகவே சிரிக்கிறார்கள், தாமாகவே வந்து உபசரிக்கிறார்கள் உதவி செய்கிறார்கள்.  வெகு சீக்கிரம் அந்த இடத்திலிருந்து இராணுவ முகாமை அகற்றப்போவதாக அவர்களே சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகள் சொல்லும் செய்தி நமக்கெல்லாம் தெரிந்த செய்தி தான். அந்த இராணுவ வீரர்களின் சிரிப்பில் எந்த குற்றமும் இல்லை அதுசரி அவர்களுக்கென்ன தெரியும் மேலிடத்தாரின் நிகழ்ச்சிநிரல்கள்.